இலங்கையில் இதுவரை 56 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.
ஏற்கனவே கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட மாணிக்க கல் வியாபாரியிடம் கொடுக்கல் வாங்கல் செய்த இருவரும், இத்தாலியில் இருந்து இலங்கை வந்து பரிசோதனை முகாமில் தங்கியிருந்த இருவருமே இவ்வாறு கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
Lanka Newsweek © 2026