Friday 21st of March 2025

English Tamil
Advertiesment


மைத்திரியின் ஆடைகளை கழற்றிய ரவி


2022-01-12 178598

 

பாரியாளவு மோசடி கோப்புக்களை வெளியே இட்டார்  

 

பொது விவாதத்திற்கு வரவும் சவால்

 

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க செவ்வாய்க்கிழமை (11) முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

கொழும்பு, தொட்டலங்கையில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த இரகசிய டொலர்கள், ஜனாதிபதியாக இருந்து அவர் செய்த இரும்புக் கடத்தல், சட்டவிரோத மதுபான அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்களை முன்வைத்த ரவி கருணாநாயக்க. நிரபராதி போல் நடித்து அரசியலில் ஈடுபடும் மைத்திரிபால சிறிசேனவின் உண்மையான விவரம் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளதாக அவர் கூறினார். பிரசித்தமான விவாதத்திற்கு வரவும் அவர் சவால் முன்வைத்தார்.

இந்த ஊழல், மோசடிகள், முறைகேடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தினால், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தன்னையும் மைத்திரிபால சிறிசேன துரத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அழித்ததாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் மேதை என குற்றம் சுமத்திய ரவி கருணாநாயக்க, போரை முடிவுக்குக் கொண்டு வந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை விரட்டியடித்ததாகவும், அவருக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

Advertiesment