Friday 21st of March 2025

English Tamil
Advertiesment


விமல்-வாசு-உதய மீது ஜனாதிபதியின் கோபம் அம்பலம்


2021-12-28 14423

 

அமைச்சரவையில் இருக்கும் போது அமைச்சரவை முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வது தவறு

 

அமைச்சரவை முடிவுகளை பகிரங்கமாக விமர்சிப்பதும் தவறு

 

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதே பரிகாரம் 

 

 
(சுஜித் மங்கள டி சில்வா)

 

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு செல்வதும், அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சிப்பதும் தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த பின்னரே அவ்வாறு செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று அந்த முடிவை விமர்சிப்பது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். .

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறும் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவின் தீர்மானம் குறித்து திங்கட்கிழமை (27) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகப் பிரதானிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertiesment