Friday 21st of March 2025

English Tamil
Advertiesment


அரசாங்க திருடர்களை அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை


2021-12-28 14426

 

தகுதி பாராமல் அனைத்தையும் வெளியிட ஊடகங்களுக்கு அனுமதி உண்டு

 

(சுஜித் மங்கள டி சில்வா)

 

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை மேற்கொள்கின்றனர் என்பதை மக்களுக்கும், நாட்டுக்கும் அச்சமின்றி வெளிப்படுத்துமாறு ஊடகப் பிரதானிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் திங்கட்கிழமை (27) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற தரம் பாராமல் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை ஆதாரங்களுடன் நாட்டுக்கும் மக்களுக்கும் அம்பலப்படுத்துமாறு பிரதான ஊடகங்களின் ஆசிரியர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertiesment