ஜனாதிபதி தேர்தல் எந்தச் சந்தர்ப்பத்திலும் பிற்போடுவதற்கு காரணங்கள் இல்லை எனவும், உரிய காலத்தில் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
அவ்வாறே, நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கும் இடையில் தேர்தல் நடைபெறும் என இன்று 22 தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
உலக அழிவு அல்லது ஆயுத மழை பெய்தால் மாத்திரமே தேர்தல்கள் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, எக்காரணமும் கொண்டும் தேர்தலை பிற்போடுவதற்கு வேறு காரணங்கள் இல்லை எனவும் எனவும் அறிவித்தார்.
ஜனாதிபதியின் காலவரையறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கூறினார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் 400 கோடி ரூபா வரை செலவாகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
Lanka Newsweek © 2024